தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா கட்டுப்பாடுகள் – முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவத் துவங்கியுள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. மேலும், வரும் 27 ஆம் தேதி பிரதமருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் முதல், இரண்டு அலைகளை தாண்டி மூன்று அலைகள் வரை வந்து மக்களை ஒரு வழி செய்துவிட்டது. இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் பலியாயினர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அதாவது கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் கண்டிப்பாக மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் போராட்டம் எதிரொலி!
மேலும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கண்டிப்பாக பொதுமக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 91.1% பொதுமக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் மற்றும் 74.75% பொதுமக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனால் கொரோனா மூன்றாம் அலை மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கொரோனா பரவல் இல்லாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாடத் துவங்கினர்.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில், டெல்லி , ஹரியானா, உத்திரபிரதேசம் முதலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை அமைக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக இன்று முதல்வர் முன்னிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், வரும் ஏப்ரல் 27 ஆம் அன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறது.