தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் போராட்டம் எதிரொலி!
கடலூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக கூறி மாணவர்கள் கடந்த ஒரு சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசே கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கிறது. இருப்பினும் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மாற்றப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அதிகளவு கட்டணம் வசூலிப்பதாக கூறி மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கடந்த ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு பொறுப்பேற்றுக்கொண்டது.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள், முகக்கவசம் அணிவது கட்டாயம் – முதல்வர் உத்தரவு!
தொடர்ந்து இந்த கல்வியாண்டில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2ம் ஆண்டு முதல் 4ம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிக்குரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ExamsDaily Mobile App Download
அந்த வகையில் காலை, இரவு என தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களை தவிர மற்ற அனைவருக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.