ஆகஸ்ட் 15 வரை கோயிலில் தரிசனம் செய்ய தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
பக்தர்களுக்கு தடை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மீண்டும் வேகம் எடுத்திருப்பதால் மாநில அரசு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகளுக்காக கோயில்களில் மக்கள் அதிகம் கூடுவதால் நோய் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே மாவட்ட நிர்வாகங்கள் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து வருகிறது. திருச்செந்தூர், திருத்தணி போன்ற முக்கிய திருகோயில்களில் ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குறித்து அரசின் விளக்கம் – தினகரன் கோரிக்கை!
தற்போது தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்க காரணம் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதே என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் தடுப்பு பணியாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
நாளை ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தங்கிவிடக் கூடிய சூழ்நிலை உள்ளதால் இன்று முதல் வரும் 15ம் தேதி முடிய 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். தினசரி பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெறும். மேலும் பக்தர்களுக்காக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்வினை யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.