பேருந்து போக்குவரத்துகள் நிறுத்தம், பூங்காக்கள் மூடல் – கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!
அகமதாபாத் நகரத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மையங்கள், பூங்கா போன்றவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் பரவி வந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கு முறையை அமல்படுத்தியது. மேலும் நாட்டின் அதிக மக்கள் தொகையை கொண்ட மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு போன்ற பெரிய நகரங்களில் தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஊரடங்கிற்கு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொற்று பரவல் சற்று குறைந்து இருந்தது.
ஊழியர்களின் பி.எப் தொகையை மத்திய அரசு செலுத்தும் – புதிய அறிவிப்பு வெளியீடு!!
கொரோனா இரண்டாம் அலை:
இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஐம்பது சதவீதம் திரும்பியுள்ள நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது பரிணாம வளர்ச்சியடைந்த உருமாறிய கொரோனா பரவி வருகிறது.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பித்த தொற்று இம்மாதத்தின் நடுப்பகுதியில் அதிக வேகமெடுத்து உள்ளது. அதிலும் மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கு:
இதனால் அகமதாபாத், சூரத், வாதோரா, ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு முறை வரும் 31ம் தேதி வரை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் மறு உத்தரவு வரும் வரையில் நகரங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், தீம் பார்க்குகள், விளையாட்டு மையங்கள் மற்றும் மைதானங்களும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்