இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – 10,649 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், குறையாவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி இன்று ஒரே நாளில் 10,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பரவி வந்த கொரோனா பரவல் தற்போது குறையத் தொடங்கி நாடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதன் காரணமாக நாட்டில், பள்ளிகள்,கல்லூரிகள், மற்ற அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனை தவிர பூஸ்டர் டோஸ் போடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை என்னும் நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த நோய் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் தற்போது குறைந்து வந்த கொரோனா பரவல் தீடீரென சற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தொற்று குறைந்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது ஒரு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கொரோனாவின் அடுத்த அலை தொடங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஏற்பாடு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இதனால் நாட்டில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,27,452ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,37,44,301ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக் பாதிக்கபட்டவர்களில் 96,442 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.59% ஆகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆகவும் உள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 2,10,58,83,682 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,17,979 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்