TNUSRB காவலர் PET தேர்வர்கள் கவனத்திற்கு – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!
2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு வரும் ஜூலை 26ம் தேதி தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
காவலர் உடல் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்தாண்டு டிசம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது. அடுத்த கட்ட தேர்வான உடல் தகுதித்தேர்வை நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் திட்டமிட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தேர்வர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது.
Airtel, Jio மற்றும் Vi ரூ.999 க்கான போஸ்ட்பெய்ட் திட்டம் – முழு விவரம்!
வரும் 26ம் தேதி தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 6 மணிக்கு தேர்வு தொடங்கும். நாள் ஒன்றுக்கு 500 பேர் வீதம் தேர்வு நடத்த சீருடை பணியாளர் தேர்வு குழுமம் திட்டமிட்டுள்ளது. உடல் தகுதித் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இணையத்தில் தங்களது அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி சான்றிதழ்கள் அவசியம். அவை அதிகாரிகளால் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைதானத்தில் உடற்தகுதித்தேர்வு நடைபெறுவதற்கான பணிகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் துணைக் குழு செய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனா அதிகம் பரவி வருவதால் தேர்வர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டு வரக்கூடாது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேர்வர்களுக்கு உடல் தகுதித்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.