மது வாங்க ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் – மாநில அரசு உத்தரவு!
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுக்கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க மது வாங்க ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் அவசியம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா சான்றிதழ்:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதனால் கேரள அரசு தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. இந்தியாவில் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளாவும் முக்கிய இடத்தில் உள்ளது. மக்கள் கூடுவதை தவிர்க்க கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களிகளும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழாவில் பக்தர்களுக்கு தடை – கொரோனா தடுப்பு!
மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன் பதிவு மூலம் நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் கேரளாவில் மது கடைகளில் மது வாங்க கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா – 497 உயிரிழப்பு!
கேரளாவில் தொற்று அதிகரிக்கும் இந்த சூழ்நிலையில் மது பிரியர்கள் மது கடைகளில் மது வாங்க சமூக இடைவெளி இன்றி அலை மோதுகின்றனர். இதனால் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது. எனவே அதனை தடுக்கும் நடவடிக்கையாக மது வாங்க வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அப்போது மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.