நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – கட்டுப்பாட்டு வழிமுறைகள் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாத நிலையில் மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை. இந்த நிலையில் விமான நிலையங்களில் மக்களை கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா பரவல், தற்போது அரசின் தீவிர நடவடிக்கைகளால் குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டன. மேலும் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா பரவல் இன்று வரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழக மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – செப்.5 முதல்வர் தொடக்கி வைப்பு!
நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு சில நாடுகளில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதே போல் இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கூடுவதும், குறைவதுமாகவும் இருந்து வருகிறது. எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி தற்காத்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை அடுத்து இந்தியாவில் மக்கள் அனைவரும் சரியான முறையில் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது, இதன் காரணமாக நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது அனைத்து சர்வதேச விமான சேவைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளன. இந்த நிலையில் மக்கள் விமான நிலையங்களில் முழுமையாக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிர்வாகம் கொரோனா பாதிப்பு உலக அளவில் முழுமையாக குறையவில்லை என்றும் மக்கள் அனைவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் மாஸ்க் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்