தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்தும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்து நாளை முதல்வருடன் ஆலோசனை நடத்த இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான் தொற்று தற்போது இந்தியாவிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 45 பேருக்கு உருமாறிய கொரோனா ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ரூ.2000 உதவித்தொகை – புத்தாண்டில் பிரதமர் மோடி அறிவிப்பு!

அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் கூடுதல் 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு – அமைச்சகம் தகவல்!

மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்துவதில் கொண்டு வர வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும், பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும் நாளை முதல்வரிடம் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இனிவரும் நாட்களில் சென்னையிலேயே உருமாறிய கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 96 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தவில்லை. ஓமிக்ரான் தொற்று ஏற்பட்ட 45 பேரில் பலர் குணமாகி 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!