மத்திய அரசு சார்பில் ரூ.2000 உதவித்தொகை – புத்தாண்டில் பிரதமர் மோடி அறிவிப்பு!

0
மத்திய அரசு சார்பில் ரூ.2000 உதவித்தொகை - புத்தாண்டில் பிரதமர் மோடி அறிவிப்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.2000 உதவித்தொகை - புத்தாண்டில் பிரதமர் மோடி அறிவிப்பு!
மத்திய அரசு சார்பில் ரூ.2000 உதவித்தொகை – புத்தாண்டில் பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் தவணை முறையில் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. அந்த திட்டத்தின் 10வது தவணை புத்தாண்டு பரிசாக விவாசாயிகள் வங்கி கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு அன்று ரூ.2000:

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM – KISAN) என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அவ்வாறு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு – அமைச்சகம் தகவல்!

இந்த ஊக்கத்தொகையானது 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 9 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 10வது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாய குடும்பங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் டிசம்பர் இறுதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று ஏற்கனவே அரசு தகவல் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேல் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து தற்போது 10வது தவணை வழங்குவது குறித்து மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த 10 வது தவணையான ரூ.2000 வரும் ஜனவரி 1ம் தேதி பகல் 12.30 மணியளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலம் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும், இத்திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடைவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!