மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு – அமைச்சகம் தகவல்!

0
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு - அமைச்சகம் தகவல்!
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு - அமைச்சகம் தகவல்!
மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 75 கோடி பேர் இணைப்பு – அமைச்சகம் தகவல்!

மத்திய அரசால் துவங்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் இதுவரை 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 75 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணைச் செயலாளர் எஸ்.ஜெகந்நாதன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு திட்டம்

நாடு முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலார்களின் நலனுக்காக மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர் ஒருவர் நாட்டின் எந்தவொரு மூலையிலும் சென்று ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இப்போது இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 75 கோடி பயனாளிகளை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

இந்த திட்டத்தில் இதுவரை சேராத அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் விரைவில் இதனுடன் இணைக்கப்படும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையின் படி, ONORC திட்டத்தின் கீழ் இதுவரை 50 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 34,100 கோடி ரூபாய்க்கு சமமான உணவு தானியங்கள் மானியமாக வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா காலகட்டத்திலும் சுமார் 45 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!

இது உணவு மானியத்தில் சுமார் 30,100 கோடி ரூபாய்க்கு சமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் சுதன்ஷு பாண்டே, இந்த மாதம் மாநிலங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் 2 லட்சத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் ONORC தொடங்கப்பட்ட டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இடையேயான கையடக்க பரிவர்த்தனைகள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!