முழு ஊரடங்கு உத்தரவு மே 17 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீடிப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஹரியானா மாநிலத்தில் அரசு அறிவிப்பின் படி தற்போது 1,16,867 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,548 ஆக பதிவாகியுள்ளது. இதனால் இதுவரை மாநிலத்தில் 6,15,897 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், நேற்றைய உயிரிழப்பான 151 பேருடன் சேர்த்து இதுவரை மாநிலத்தில் 5,605 ஆக உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தொற்றை கட்டுப்படுத்த ஹரியானா மாநில அரசு முன்னதாக சிஆர்பிசியின் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவு மற்றும் தினசரி இரவு ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. மேலும், மே 3ம் தேதி முதல் குருகிராம், ஃபரிதாபாத், பஞ்ச்குலா, சோனிபட், ரோஹ்தக், கர்னல், ஹிசார், சிர்சா மற்றும் ஃபதேஹாபாத் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைசர் அனில் விஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் கோவிட் – 19 பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கடுமையான நடவடிக்கைகள் குறித்த உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.