ஜூலை 15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் தளர்வுகள் அறிவித்து ஊரடங்கை ஜூலை 15 வரை நீடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய ஊரடங்கு மட்டுமே ஒரே ஆயுதமாக இருந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு – நிர்வாகம் அறிவிப்பு!
மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தால் மே 16 முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இருந்த போதிலும் தினசரி கொரோனா பாதிப்பு மேலும் குறைய வேண்டும் என்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு ஜூலை 15 வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, முடி திருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.