சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை செல்லுபடி காலம் நீட்டிப்பு – நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் பயணிகள் கொரோனா காலத்தில் பயன்படுத்தாத பயண அட்டை செல்லுபடியாகும் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டு உளளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் :
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளும் முடங்கியது. பின், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் மாத ஊதியம், ரூ.2.75 லட்சம் வரி – குடியரசுத் தலைவர் தகவல்!
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு என்று தனியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த வாரம் முதல் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் குறிப்பிட்ட அளவு பயணிகளுடன் துவங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மெட்ரோ ரயிலில் 50 சதவீத பயணியர் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதே போல் பயணியரின் வருகையை பொறுத்து கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா காலத்தில் பயன்படுத்தாத பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து முழு விபரங்களை பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.