ரூ.5 லட்சம் மாத ஊதியம், ரூ.2.75 லட்சம் வரி – குடியரசுத் தலைவர் தகவல்!
இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சொந்த ஊரான உத்தர பிரதேச மாநிலம், பரனூக் கிராமத்துக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனது மாத ஊதியம் மற்றும் வரி குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சுற்றுப்பயணம்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தர பிரதேச மாநிலத்தை சொந்த ஊராக கொண்டவர். தற்போது அரசுப்பணி நிமித்தமாக தலைநகர் டெல்லியில் வசித்து வரும் அவர் தனது சொந்த ஊரான உத்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பரனூக் கிராமத்துக்கு நேற்று முன்தினம் (ஜூன் 27) சென்றார். இதற்கு முன்னதாக ரயில் மூலம் டெல்லியில் இருந்து கான்பூருக்கு சென்ற அவர், அந்த வழியில் அமைந்துள்ள ஜின்ஹாக் நகர் ரயில் நிலையத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக பணி நியமனம் – ஊழல் தடுப்பு துறை விசாரிக்க பரிந்துரை!
அப்போது அவர் பேசுகையில், ‘நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிற்கவில்லை என்றால், அந்த ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுன்றன. இந்த செய்கையால் யாருக்கு இழப்பு ஏற்படும்? ரயில்கள் என்பவை அரசின் சொத்து. அதாவது வரி செலுத்தும் மக்களின் சொத்து. ரயில்கள் எரிக்கப்படுவதால் வீணாவது மக்களின் வரிப் பணம் தான். இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற முறையில் மாதந்தோறும் ரூ.5 லட்சம் ஊதியத்தை பெறுகிறேன்.
TN Job “FB Group” Join Now
இவற்றில் ரூ.2.75 லட்சத்தை இந்திய அரசின் வருமான வரிக்கு செலுத்தி வருகிறேன். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நான் வாங்கும் ஊதியத்தை விட அதிகமாகவே அரசு அதிகாரிகள், இந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பெறுகின்றனர். அந்த வகையில் மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக வைத்து தான் பல வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் கட்டாயமாக வரி செலுத்த வேண்டும். அரசின் சொத்தை சேதப்படுத்துவதால் இழப்பு உங்களுக்கும் எனக்கும் தான்’ என்று பேசியுள்ளார்.