ஜூலை 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – 8 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு நேரங்கள் அறிவிப்பு!

0
ஜூலை 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - 8 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு நேரங்கள் அறிவிப்பு!
ஜூலை 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - 8 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு நேரங்கள் அறிவிப்பு!
ஜூலை 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – 8 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு நேரங்கள் அறிவிப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் 8 மாவட்டங்களில் தற்போதுள்ள முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 7 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தவிர இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

ஆந்திர மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 5% க்கும் குறைவான நேர்மறை பாதிப்பு விகிதத்தை பதிவு செய்திருக்கும் சில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட எட்டு மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொடுக்கப்பட்டிருந்த தளர்வுகளுக்கு பதிலாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகளின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 45 நாட்களுக்கு பின்னர் பேருந்து சேவைகள் – பொதுமக்கள் நிம்மதி!

இந்த கூடுதல் தளர்வு நேரங்கள் குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களுக்கு மட்டும், ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின் படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 9 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்கலாம் எனவும், அந்நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும். முன்னதாக விசாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக 170 க்கும் குறைவாக நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்த புதிய ஊரடங்கு உத்தரவு குறித்து விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் மணீஷ் குமார் சின்ஹா ஐபிஎஸ் கூறுகையில், ‘கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால் மட்டுமே பாதிப்புகள் வீதம் வீழ்ச்சியடையும். இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறிய சிலர் மீது நகர காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரவு நேரங்களில், சட்டம் மற்றும் ஒழுங்கு போக்குவரத்து மற்றும் குற்ற துறைகளைச் சேர்ந்த இரண்டு போலீஸ் குழுக்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விதிமீறல்கள் குறைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!