தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படாத நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த அரசு கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரவு மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் திருமண உதவித்தொகை நிபந்தனைகள் – மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கட்டாயம் விதிமுறைகளை கடைபிடிக்கிறதா என்பதை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – அமைச்சர் தகவல்!
மேலும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் முன்னவாள்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.