தமிழக அரசின் திருமண உதவித்தொகை நிபந்தனைகள் – மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
தமிழக அரசு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு திருமணத்திற்கு உதவித்தொகை வழங்கி வந்தது. தற்போது திருமண மண்டபத்தில் நடைபெற கூடிய திருமணங்களுக்கு உதவித்தொகை ஏதும் வழங்கப்படாது என வெளியான அறிக்கையை ரத்து செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளது.
திருமண உதவித்தொகை:
தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை, தாலிக்கு தங்கம் 8 கிராம் ஆகியவையும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், தாலிக்கு தங்கம் 8 கிராம் அரசு வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – அமைச்சர் தகவல்!
இந்த திட்டத்தின் மூலம் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள பெண்கள் பலர் பயனடைந்து வந்தனர். தற்போது திருமண மண்டபத்தில் நடைபெறக்கூடிய திருமணங்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கப்படாது என தமிழக சமூக நலத்துறை இயக்குநர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை – சென்னை மாநகர காவல்துறை!
தமிழக அரசு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை பெண் வீட்டாருக்கு வழங்கி வருகிறது. ஆனால், திருமண நிகழ்வை பெண் வீட்டார் முடிவு செய்வதில்லை. மணமகன் வீட்டார் தான் முடிவு செய்கின்றனர். திருமணத்திற்கு பின்னர் மணமகள் அந்த வீட்டின் உறுப்பினராகிறார். எனவே ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.