தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி வழங்க தேவையான பணிகள் நடைபெற்று வருகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலவச மடிக்கணினி:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்வதற்கு முன் கணினி அறிவை பெறுகின்றனர். அந்தந்த பள்ளிகளிலேயே 12ம் வகுப்பு முடித்தவுடன் அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த மடிக்கணினிகள் உயர்கல்வியில் மாணவர்களுக்கு பேருதவியாக உள்ளது. கல்லூரி இறுதி ஆண்டுகளில் மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு உதவுகிறது. மேலும் மடிக்கணினியில் இணையம் வாயிலாக பாடங்களை கற்கின்றனர்.
அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு தடை – சென்னை மாநகர காவல்துறை!
தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் கல்வி பயில அரசின் இலவச மடிக்கணினி உதவுகிறது. மேலும் கடந்த ஆண்டு முதல் 11ம் வகுப்பிலேயே மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ வி.பி.நாகை மாலி விலையில்லா மடிக்கணினி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது 2011 ஆம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில் இதுவரை 45,71,675 பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார்.
செப்.8 முதல் 12 வரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கி விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
மேலும், 2017 -2018 ஆண்டில் பயின்ற மாணவர்களில் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ள மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதாகவும் 2020-2021 கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயின்ற 4,97,028 மாணவர்களுக்கும் தற்போது 2021-22 கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயின்று வரும் தோராயமாக 5,00,000 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் படிப்படியாக மடிக்கணினி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.