பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

கொரோனா வைரஸின் சமீபத்திய XE மாறுபாடு இந்தியாவில் அச்சுறுத்தலை உருவாக்கி இருக்கும் நிலையில், வைரஸ் பாதிப்பு காரணமாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூடல்

சமீப காலமாக உலக நாடுகளை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் சமீபத்திய XE மாறுபாடு இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸின் 3 அலைகளை எதிர்த்து போராடி இப்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வரும் நிலையில், மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4ம் அலை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸின் XE மாறுபாடு அண்டை நாடுகளில் தீவிரமடைந்து வருவதால் இந்தியாவிலும் இந்த பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.

தமிழக அரசு பள்ளிகளில் 9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு!

இப்படி இருக்க உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சில மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா வைரசுக்கு எதிராக நேர்மறை சோதனை செய்ததை அடுத்து நொய்டா மற்றும் காஜியாபாத்தில் உள்ள மூன்று பள்ளிகள் நேற்று (ஏப்ரல்.12) முதல் மூடப்பட்டன. இது குறித்த தகவலின்படி, காஜியாபாத்தில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் நொய்டாவில் உள்ள பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் உட்பட 16 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.

இந்த மாணவர்களுக்கு வைரஸின் சமீபத்திய XE மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பயின்ற பள்ளி ஒன்று அடுத்த மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

அந்த வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி, நாட்டில் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 11,058 ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில், ‘புதிய கொரோனா வைரஸ் வகைகள் வெளிவருவது குறித்து எந்த அச்சமும் தேவை இல்லை. கொரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு இருக்கலாம். ஆனால் அவை கடுமையான நோயை ஏற்படுத்தவில்லை என்பதால் பீதி அடைய எதுவும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!