தினசரி இரவு 10.30 மணிமுதல்..! செப்.15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
புதுச்சேரியில் கடந்த மாதங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் மபலர் ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நோய் பரவும் அச்சத்தால் அரசு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை பிறப்பித்தது. மேலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரிவுபடுத்தப்பட்டது. அதன் விளைவாக கொரோனா பரவல் புதுச்சேரியில் கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் – முதல்வர் அறிவிப்பு!
மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அரசு மக்களின் நலன் கருதியும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. இதனால் புதுச்சேரி மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். ஆனாலும் தொற்று முழுமையாக குறையவில்லை என்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன் படி ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது செப்டம்பர் 15 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் மற்றொரு பகுதியாக புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.