தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் பெயர் மாற்றம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் இதுவரை ‘குடிசை மாற்று வாரியம்’ என்ற பெயரில் இயங்கி வந்த அரசுத்துறை இனி ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
பெயர் மாற்றம்
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சுமார் 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் ஆட்சியமைத்துள்ளதான திமுக தலைமையிலான அரசின் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், பல புதிய மாற்றங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளின் பெயர்களில் ஏற்கனவே சில மாற்றங்களை அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் குடிசை மாற்று வாரிய துறையின் பெயரும் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு – இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த பேரவை நடைபெறும் ஒவ்வொரு நாளும் பல வகையான புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் (செப்டம்பர் 1) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கை தொடர்பிலான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் சுமார் ரூ.950 கோடி செலவில் 6,000 புதிய குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டுள்ளதாக குடிசை மாற்று வாரியம் தகவல் அளித்தது. இதையடுத்து, முதல்வர் முக ஸ்டாலின், குடிசை மாற்று வாரிய துறையின் பெயரை மாற்றி, அவை ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என அழைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, மதுரையில் நடைபெற்ற மேம்பால பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.