உலக அளவில் கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு – WHO வெளியிட்ட ஷாக் தகவல்!
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கொரோனா பாதிப்பு:
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்தது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முதல் கட்டமாக ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் மீண்டும் வீடுகளில் முடங்கினர். அதே நேரம் மற்ற நாடுகளில் தொற்று வெகுவாக பரவ ஆரம்பித்தது.
தமிழகத்தில் ஜன.23ம் தேதி பவர்கட் எச்சரிக்கை.. முழு லிஸ்ட் இதோ!
Follow our Instagram for more Latest Updates
இதனை கருத்தில் கொண்டு கனடா, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஒரு மாத காலமாக உலக அளவில் கொரோனாவால் 20% மரணங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 28 நாட்களில் சுமார் 1.3 கோடி பேர் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 15-ந் தேதி நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 66 கோடிக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி சுமார் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பரிதமாக உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.