தமிழக அரசின் கொரோனா இறப்பு சான்றிதழ்கள் ஆய்வு – நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு ஆய்வு குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை ஜூன் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இறப்பு சான்றிதழ்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்த உயிரிப்புகளால் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினைகளையும், நண்பர்களையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நோய்த்தொற்று பரவும் அச்சமும் அதிகரித்துள்ளது. இந்தியா கொரோனா இரண்டாம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட கொரோனா இரண்டாம் பரவல் இந்தியாவில் தான் அதிகம் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
AIIMS INI CET நுழைவுத்தேர்வு ஒரு மாதம் ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கொரோனாவால் தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் பட்டம் பெரும் வரையிலான கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுள்ளது. கொரோனாவால் இறந்ததை பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களை வேறு காரணங்களை பதிவிட்டு சான்றிதழ் தருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவால் உயிரிழந்தவர்களை அரசு முறையாக பதிவு செய்யவில்லை என நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணங்கள் கிடைப்பது இல்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசு ஆய்வு குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை ஜூன் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.