ஆகஸ்ட் 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்ட மாநில நிர்வாகம், முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கத்தில் அரசு அலுவலகங்களை 100 சதவீதத்துடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை பரவல் தீவிரமடைந்து வந்ததை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகள் ஜூன் மாதத்தில் இருந்து சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே மளிகை பொருட்கள் மற்றும் பிற கடைகள் வாரம் முழுவதும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அமைச்சர் ஆலோசனை!
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வருவாய் நீதிமன்றங்கள் அனைத்தும் 50 சதவீத வருகையுடனும், மதுபான கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், நீர் பூங்காக்கள், பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் 50% திறனுடன் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த பொது முடக்கத்தின் போது அரசு அலுவலகங்கள் அனைத்தும் 100 சதவீத திறனுடன் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தவிர மற்ற அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏற்கனவே வழங்கப்பட்ட பிற தளர்வுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.