தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் மற்றும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. மேலும் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
PF பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மருத்துவ செலவுகளுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!
தமிழக அரசு ஜூலை 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உள்ளது. ஒடிஷா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாற்று நாள்களில், 50% வருகையுடன் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதனையடுத்து தமிழகத்திலும் எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. தனியார் பள்ளி நிர்வாகங்களும் பள்ளிகளை திறக்க கோரி தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. பள்ளிகளை திறப்பதில் கவனம் தேவை என மருத்துவ வல்லுனர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதை தொடர்ந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.