அக்.11 வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கர்நாடகா மாவட்டத்தில் அமைந்துள்ள உடுப்பி மாவட்டத்தில் வரும் அக்டோபர் 11ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கர்நாடகா மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மால்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கடைகள் ஆகிய அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொதுமுடக்கம் ஆகிய அனைத்தும் கடந்த மாதத்தில் நீக்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – CERT எச்சரிக்கை!
இருந்தாலும் தற்போதுள்ள கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் மட்டும் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடுப்பி மாவட்ட கமிஷனர் குர்மா ராவ் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘உடுப்பி மாவட்டத்தில் தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும்.
பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு விவரம்!
இந்த கட்டுப்பாடுகள் அக்டோபர் 11ம் தேதி வரை அமலில் இருக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய காரணம் இன்றி பொது மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளானது கேரளாவுக்கு அருகில் இருக்கும் கர்நாடகா மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.