பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு விவரம்!

0
பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு விவரம்!
பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாநில வாரியான முழு விவரம்!
பாரத் பந்த் எதிரொலியால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில வாரியான முழு விவரம்!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 27ம் தேதியான இன்று நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் சார்பாக நடத்தப்பட்ட பாரத் பந்த் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனை பற்றிய மாநில வாரியான முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

பாரத் பந்த்:

வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு மத்திய அரசு புதிதாக மூன்று சட்டங்களை அறிவித்தது. இந்த புதிய சட்டங்களை அரசு திரும்ப பெறக்கோரி நாட்டின் விவசாயிகள் கடந்த ஆண்டு முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் செப்டம்பர் 17ம் தேதி ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்தது.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரனுக்கு ரூ.104 வீழ்ச்சி!

அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் இன்று பாரத் பந்த் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பந்த் காரணமாக சில மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை இன்று மூடுவதாக அறிவித்தது. அதன்படி, கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திரா மாநில அரசுகளும் பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள், கடைகள், தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால், உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் பிற மாநிலங்கள் ஏற்கனேவே மாணவர்கள் கோவிட்- 19 தொற்று நோயால் மாணவர்கள் கற்றல் சிரமங்களை அடைந்துள்ளனர்.

இதனால் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்றும் ஆனால் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதேபோல், டெல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்றும், இருப்பினும், அவர்கள் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்ஸின் தலைவர் சசி குமார், அவர்கள் ஊழியர்கள் தங்கள் ஆதரவை காட்ட பச்சை நிற ஆடைகள் அல்லது பச்சை பேட்ஜ்களை அணியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய IT துறையில் 1,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு – ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் திட்டம்!

இதேபோல், கர்நாடகா, பொதுப் போக்குவரத்து (கேஎஸ்ஆர்டிசி மற்றும் பிஎம்டிசி) ஊழியர் சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், பள்ளிகள், கல்லூரிகள், லாரி, ஆட்டோ, ரிக்ஷா மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் தொழிற்சங்கங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் ஆனால் இன்று செயல்பட இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!