கோவை மாநகரில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2ம் அலை தொற்று பாதிப்பு அதிகமாக பதிவு செய்யப்பட்டு வரும் கோவை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவானது வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர மாநிலம் முழுவதும் கொரோனா 3 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு வரும் தினசரி கொரோனா பாதிப்பின் அடிப்படையில் கோவை மாநகரத்திற்கு மட்டும் அரசு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாநகரில் குறைந்துள்ள நோய் தொற்றை கருத்தில் கொண்டு தற்போது சில கூடுதல் தளர்வுகளுடன் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நேற்று (செப்டம்பர் 16) முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக அக்டோபர் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாநகரில் தற்போது பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதே போல உணவகங்கள், அடுமனைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்காக மட்டுமே திறந்திருக்க வேண்டும். மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
5 முதல் 10ம் வகுப்புகளுக்கு அக்.1 பள்ளிகள் திறப்பு – செப்.17 முதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!
மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை மட்டும் 50%த்துடன் இயங்கவும், உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50% த்துடன் இயங்கவும் அனுமதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் மாட்டுச் சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்படலாம். இதனுடன் வரும் 20 ஆம் தேதிக்குள் அனைத்து வணிக வளாகங்கள், துணி, நகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளின் ஊழியர்களும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தியிருக்க வேண்டும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் பொது மக்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.