இந்தியாவில் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவில் மத்திய அரசின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது.
இலவச உணவு தானியம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதனால் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். கூலித்தொழிலிகள் வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெற வசதி – அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
அதனை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இதன் மூலம் 81 கோடியே 35 லட்சம் பேர் பலனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இலவச தானியங்கள் ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது இந்த திட்டமானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் படி இந்த திட்டம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.