கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கல்வி பெற வசதி – அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வழிக் கல்வியை பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் கல்வி:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடிய நிலையில் உள்ளன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வழிக்கல்வியில் பங்கேற்பதில் தொடர்ந்து பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகிறது. தற்போது இது குறித்து தமிழக பெண்கள் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – ஜவுளி ஏற்றுமதி பணிகள் துவக்கம்!
அவர்கள் மனுவில் தெரிவித்ததாவது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கணினி, மொபைல் வசதிகளை பெற முடியவில்லை. எனவே அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் டிஜிட்டல் முறையில் கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு உதவியாக படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
இதனை தடுக்க கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் மாணவர்கள் கல்வி பெற ஏதுவாக டிஜிட்டல் வசதிகள் அமைத்து அதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் இது குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.