நவம்பர் 21 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்புகள் சமீபத்தில் அதிக அளவில் பதிவாகி வருவதால் அங்கு மீண்டும் நவம்பர் 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மாதங்களில் அரசின் கட்டுக்குள் இருந்தது. இதனால் அந்நாட்டு அரசு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து வந்தது. ஆனால் தற்போது பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 3,800 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலேயே நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை தான் உச்ச அளவாக உள்ளது.
தீவிரமெடுக்கும் கொரோனா, பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு – சீனா நடவடிக்கை!
சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 85% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 49.84% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளனர். முன்னதாக அங்கு அமலில் இருந்து வந்த ‘ஜீரோ கொரோனா’ என்ற திட்டம் திரும்ப பெறப்பட்டு, தற்போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மிகவும் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முடிவுக்கு வரும் கொரோனா ஊரடங்கு, தடுப்பூசிகள் பலன் – பொதுமக்கள் நிம்மதி!
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நவம்பர் 21ம் தேதி வரை நீட்டிப்பதாக சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை இது தொடர்பாக, நாட்டில் இயல்பு நிலை திரும்ப அதிக காலம் தேவைப்படுகிறது. மருத்துவமனைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு விரைவில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வருவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.