தீவிரமெடுக்கும் கொரோனா, பள்ளிகளை மூட அதிரடி உத்தரவு – சீனா நடவடிக்கை!
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து தடுப்பு பணியாக அனைத்து பள்ளிகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று கடந்த 2019 ம் ஆண்டு சீனா நாட்டின் உஹான் மாநிலத்தில் இருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரசால் சீனா பெரும் இழப்பை சந்தித்தது. தினசரி அதிகரித்த தொற்று எண்ணிக்கையால் சீன அரசு செய்வதறியாமல் திணறியது. தீவிரமாக பரவிய தொற்றால் சீனாவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது.
முடிவுக்கு வரும் கொரோனா ஊரடங்கு, தடுப்பூசிகள் பலன் – பொதுமக்கள் நிம்மதி!
ஊரடங்கை அறிவித்து மக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை செய்தது. இந்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டும் பாதிக்கவில்லை. உலகில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தியது. கொரோனா அடுத்தடுத்து இரண்டாம் அலை மூன்றாம் அலை என்ற வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களை தாக்கி வருகிறது. தற்போது வைரஸை ஒழிக்கும் முயற்சியாக அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் கவனத்திற்கு – அக்.23ம் தேதி 6வது மெகா முகாம்!
இந்த தடுப்பூசிகள் நல்ல பலனை அளித்துள்ளது. மேலும் தொற்று பரவல் குறைவதால் பல நாடுகள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருகின்றன. மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில் கொரோனா வைரஸ் உருவான சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடர்ந்து 5வது நாளாக அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் தடுப்பு பணியாக விமானங்களையும் சீனா ரத்து செய்துள்ளது.