முடிவுக்கு வரும் கொரோனா ஊரடங்கு, தடுப்பூசிகள் பலன் – பொதுமக்கள் நிம்மதி!
கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் கடந்த 9 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த மெல்போர்னில் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து கொரோனா உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததன் காரணமாக நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்தது. அதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தாக்கத்தின் அளவை கொண்டு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என நகரங்கள் பிரிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் கவனத்திற்கு – அக்.23ம் தேதி 6வது மெகா முகாம்!
உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட நிலையில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. அதனை தொடர்ந்து தடுப்பூசி கண்டுபிடிப்பு தீவிரமாக்கப்பட்டது. தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த 9 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.
அக்.29 முதல் நவ.7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது மெல்போர்னில் கோவிட் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நீண்ட நாட்களாக நீடித்து வந்த ஊரடங்கானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு மேற்பட்டோர் 80 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்திய பின்னர் தான் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை தெரிவித்தது. தற்போது 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.