அக்.29 முதல் நவ.7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதியன்று தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. வழக்கமாக பண்டிகை காலங்கள் தோறும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அளிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த விடுமுறை நாட்காட்டியை மீண்டும் திருத்த முடிவு அரசு செய்துள்ளது.
அக்டோபர் 28 முதல் மீண்டும் ஊரடங்கு அமல் – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
அதன் கீழ் அக்டோபர் 29 முதல் நவம்பர் 7ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளி விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை மனதில் கொண்டு விடுமுறைகளை ரத்து செய்ய அரசு முடிவு செய்திருந்தது. அந்த வகையில் அனைத்து நீண்ட விடுமுறைகளையும் தற்போது நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. அதே போல பள்ளிகள் சனிக்கிழமையன்றும் செயல்படும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை வைக்காமல் பொருட்கள் வாங்கலாம்!
இப்போது ராஜஸ்தான் இடைநிலைக் கல்வித்துறை, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு தீபாவளி விடுமுறையை அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானின் அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்காட்டியின் படி, தீபாவளி பண்டிகைக் கால விடுமுறை நவம்பர் 4 முதல் நவம்பர் 7ம் தேதி வரை இருக்கும். அதனால் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகள் பயிலும் அந்தந்த பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தெளிவுபடுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.