அக்டோபர் 28 முதல் மீண்டும் ஊரடங்கு அமல் – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
கோவிட் -19 தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அக்டோபர் 28ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாஸ்க்கோவின் மேயர் செர்ஜி சோபியானின் இன்று அறிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு அமல்:
ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 34,073 பேருக்கும், 1,028 உயிரிப்புகளும் பதிவாகியுள்ளது. இதுவரை நாட்டில் பதிவாகியதில் அதிக தொற்று எண்ணிக்கையாக உள்ளது. இதனால் ரஷ்ய அதிபர் முக்கிய முடிவுகளை நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக எடுத்துள்ளார். அதன்படி, கடந்த புதன்கிழமை கொரோனா தொற்றை குறைக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை வைக்காமல் பொருட்கள் வாங்கலாம்!
அரசு அதிகாரிகளுக்கு இது தொடர்பாக, அக்டோபர் 30 முதல் நவம்பர் 7ம் தேதி வரை மக்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு பிராந்தியங்களின் தலைவர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ரஷ்ய அதிபர் புடினின் உத்தரவை தொடர்ந்து மாஸ்கோ நகரின் மேயர் செர்ஜி சோபியானின் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!
அதன்படி, மாஸ்கோ நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அக்டோபர் 28 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக கூறினார். ஊரடங்கு காலத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். மற்ற அனைத்து கடைகள், பார்கள் மற்றும் உணவகங்களும் திறக்க அனுமதி இல்லை என்று உத்தரவிட்டுள்ளார்.
Yes the best idea because we want to save the people