தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கைரேகை வைக்காமல் பொருட்கள் வாங்கலாம்!
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நடைமுறையில் உள்ள பயொமெட்ரிக் கருவியில் வயது முதிர்ந்தவர்களுக்கு கைரேகை பதிவாகவில்லை என்றால் பதிவேட்டில் பதிவு செய்து விட்டு பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதந்தோறும் மலிவு விலையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்கள் மாதந்தோறும் பொருட்களை வாங்கும் பொது உரிய பதிவேடுகளில் பதிவு செய்யப்படும். மேலும் அவர்களின் ரேஷன் அட்டையிலும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்தது. மேலும் இந்த பதிவேடுகளில் பதிவு செய்வதில் பொது மக்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்ய நவீன காலத்திற்கு ஏற்ப ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் & நேரடி முறையில் பாடங்கள் – நீதிமன்றம் கருத்து!
பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். அண்மையில் இந்த ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் பொருட்கள் வாங்க முடிவதில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளபட்டு உணவு வழங்கல் துறை அதிகாரிகளால் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது.
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – கால அவகாசம் நீட்டிப்பு!
வயதனாவர்களுக்கு கை விரல் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பதிவாகவில்லை. இதனால் ரேஷன் பொருள்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயோமெட்ரிக் முறையில் வயதானவர்களின் விரல் கைரேகை பதிவாகவில்லை என்றாலும் அவர்கள் பதிவேடுகளில் பதிவு செய்து விட்டு பொருட்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கொண்டு வரும் ரேஷன் அட்டையில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.