தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் கவனத்திற்கு – அக்.23ம் தேதி 6வது மெகா முகாம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொடர்ந்து ஞாயிறுதோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தடுப்பூசி முகாம்:
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா இதுவரை 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழக முதல்வர் மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் 1,35,865 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் பொழுது ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது சிறப்பு முகாம்களின் மூலம் தெரிய வந்தது.
அக்.29 முதல் நவ.7 வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை உறுப்பினர்கள் கொண்ட குழுவுடன் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய முகாம் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி வரும் வாரத்தில் 6வது முகாம் நடைபெற இருக்கிறது. மக்கள் அவர்கள் ஊரிலே முகாம் நடைபெறுவதால் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதாக மருத்துவ குழு தெரிவிக்கின்றது. அதனை தொடர்ந்து செப்-12 ம் தேதி நடைபெற்ற முதல் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1,91,350 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 19- ம் தேதி 2,02,931 தடுப்பூசிகளும், 26 ம் தேதி 2,25,627 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதனால் இந்த மாதமும் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனால் கடந்த அக்-3 ம் தேதி 1,58,144 தடுப்பூசிகளும், 10 ம் தேதி 1,71,833 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்த வாரமும் அதாவது அக்-23 ம் தேதி 2.50 லட்சம் தடுப்பூசிகளை இலக்காக நிர்ணயித்து 6 வது கட்டமாக 1600 தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 28 முதல் மீண்டும் ஊரடங்கு அமல் – கொரோனா பாதிப்புகள் எதிரொலி!
இதற்காக 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் உட்பட மொத்தம் 16,000 நபர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். இதன்முலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் கடந்த 20 ம் தேதி வரை மட்டும் அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 36,14,747 முதல் தவணை தடுப்பூசிகளும், 20,71,455 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக மொத்தம் 56,86,202 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 3,24,760 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 1,36,640 கோவாக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 4,61,400 கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் கட்டாயம் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.