இன்று முதல் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கோவா மாநில அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்கள் சனிக்கிழமை கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்துதல் தொடர்பான முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 5 வரை நீட்டித்து அறிவித்து வெளியிட்டார். அம்மாநிலத்தில் இந்த ஆண்டு மே 9 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முதலில் விதிக்கப்பட்டது, அதன் பின்னர் பல முறை தொடர்ச்சியாக சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவா அரசு 2021 ஜூலை 05 காலை 7 மணி வரை மாநில அளவிலான முழு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க முடிவு செய்துள்ளது என்று முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்து உள்ளார்.
WhatsApp மெசேஜ்கள் அழிந்து விட்டால் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்!
மாநில சுகாதாரத்துறை அறிவிப்பின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 235 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, 293 நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். இருப்பினும், மாநிலத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த முதலமைச்சர் கடந்த வாரம் கட்டுப்பாடுகளை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார். கோவாவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
அண்டை மாநிலத்தில் டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா வைரஸின் தொற்று பதிவாகியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவாவின் எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவாவிற்குள் நுழையும் எந்தவொரு நபருக்கும் COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர் தனிமைபடுத்தப்படுவார் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.