தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அலை என உருமாறி தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தாக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது சில மாநிலங்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
SBI வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள் – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!!
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படும் மாநிலங்களில் கேரளா முன்னணி வகித்து வருகிறது. எனவே கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் கூடுதல் கொரோனா தடுப்பூசிகள் கேட்டு ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 12ம் தேதி 20 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை 10,000 முகாம்கள் நடத்தி 20 லட்சம் தடுப்பூசி போடப்படும் என செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கும் மாணவர்களின் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.