தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள், போராட்ட வழக்குகள் வாபஸ் – முதல்வர் அறிவிப்பு!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போராட்ட கால நடவடிக்கைள் கைவிடப்படும் எனவும், இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வழக்கு தள்ளுபடி
தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், கல்லூரி பேராசியர்கள் என பலரும் ஊதிய உயர்வு உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இந்த காலங்களில் அவர்கள் பணி செய்வதை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அவர்கள் மீது காவல்துறை வழக்குகள் பதிவு செய்யப்படுவது உண்டு. இது தவிர ஆசிரியர்கள் மீது சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா – 290 பேர் பலி!
இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைள் கைவிடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அந்த வகையில் பள்ளி வேலை நாட்களில் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த காலம், பணிநீக்க காலம் அவர்களின் வேலை நாட்களாகவே கருதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போரட்டம் காரணமாக பணி நிறுத்தம் செய்த ஆசிரியர்கள், பணி மாறுதல் பெற்றிருந்தால் மீண்டும் அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே பணி கொடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி பேருந்து நிலையங்களில் மதுபான கடைகள் திறப்பு – மாநில அரசு!
மேலும் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவு ஊழியர்களாக பணியாற்றுபவர்களது ஓய்வு காலம் 60 ஆக நீட்டிக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.