உலகில் 65.50 லட்சம் உயிர்களை பலி வாங்கிய கொரோனா – வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்!
ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டி வைத்த கொரோனா தொற்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உயிர் பலிகளை வாங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று:
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் சீனாவின் யூகான் பகுதியில் இருந்து பரவத் தொடங்கிய ஆபத்தான தொற்று தான் கொரோனா. மிகவும் அதிவேகத்தில் பரவும் இந்த நோய் தொற்று சில வாரங்களிலேயே உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் உலக நாடுகள் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
மேலும், இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கான உயிர் பலிகளையும் கொரோனா தொற்று ஏற்படுத்தியது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டாலும், முழுமையாக கொரோனா பரவலை தடுக்க முடியவில்லை. இதனால் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கடும் சோதனைக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர். தற்போது தடுப்பூசியால் நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
தொடரும் மின்துறை ஊழியர்களின் போராட்டம்.. அரசு இறுதி எச்சரிக்கை – மீறினால் நோட்டீஸ்!
Exams Daily Mobile App Download
இருப்பினும், முழுமையாக கொரோனா தொற்று நம்மை விட்டு இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலக நாடுகளை சேர்ந்த 6,550,573 பேர் இதுவரை கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும், 623,446,521 பேரருக்கு இதுவரை தொற்று பாதித்த நிலையில், 603,298,958 பேர் சிகிச்சை மூலம் குணமடைந்து உள்ளனர். குறிப்பாக, தற்போதைய நிலவரத்தின் படி 39,453 பேர் கொரோனாவால் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்