TNUSRB 2ம் நிலை காவலர் உடற்தகுதித்தேர்வு தொடக்கம் – கொரோனா சான்றிதழ் கட்டாயம்!
தமிழகத்தில் 2 ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட அந்தந்த மாவட்ட மைதானங்களில் இன்று முதல் துவங்கியுள்ளது. தேர்வர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
2ம் நிலை காவலர்கள் உடல் தகுதித்தேர்வு :
தமிழகத்தில் சிறை காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளது. சென்னை, கடலூர், திருச்சி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2ம் கட்ட தேர்வான உடல் தகுதித் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித் தொலைக்காட்சி அட்டவணை!
தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும் எனவும் தொலைபேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் போன்றவற்றை கொண்டு வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று (26.07.2021) 2ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தேர்வர்களின் உயரம், எடை, மார்பளவு மற்றும் ஓட்டம் போன்றவை அளக்கப்படுகிறது. 7 நிமிடத்திற்குள் 1500 மீட்டரை கடக்கும் நபர்கள் மட்டுமே அடுத்தகட்ட தகுதித் தேர்விற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் கொரோனா தொற்று பரவி வருவதால் தேர்வர்கள் முன்னெச்சரிக்கையாக 4 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசின் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.