நாடு முழுவதும் ஒரே நாளில் 54,069 பேருக்கு கொரோனா – 1,321 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக 54,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. நிலமையை சரி செய்ய ஊரடங்கு மட்டுமே ஒரே வழியாக இருந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இதனால் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக 54,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,321 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,91,981 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 68,885 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 29,06,3740 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6,27,057 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 30,16,26,028 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.