இந்தியாவில் ஒரே நாளில் 853 பேர் உயிரிழப்பு – 46,617 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் 4 லட்சம் வரை காணப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 5க்கு பிறகு கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,04,58,251 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி 853 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,00,312 ஐ எட்டியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 59,384 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,95,48,302 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 5,09,637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் 34,00,76,232 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.