தமிழகத்தில் ஜூலை 5க்கு பிறகு கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 5க்கு பிறகு அடுத்தகட்ட ஊரடங்கில் எவ்வாறான தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அது தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பல கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மே 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா சங்கிலி உடைக்கப்பட்டு பாதிப்பு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக அதிகளவு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) – புதிய தகவல்!
தற்போது கொரோனா இரண்டாம் அலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கில் எந்த மாதிரியான தளர்வுகள் இருக்கும் என பலர் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள காரணத்தால் பல முக்கிய தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் (வகை 1) இந்த முறை கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், துணிக்கடைகள், நகைக்கடைகளை ஏசி வசதி இல்லாமல் இயங்கவும் அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.