இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – 7,591 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,591 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் புதிதாக 7,591 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,28,393ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து நாட்டின் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,874 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. மேலும், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,35,852 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு குணமடைந்தோர் விகிதம் 98.66% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
PM KISAN திட்ட விவசாயிகள் கணத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க நாளை கடைசி நாள்!
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 64,667 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் 2,12,39,92,816 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 22,50,854 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைவு தான் என்றாலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதிக வீரியத்துடன் தாக்கும் என்பதால் இதிலிருந்து தப்ப மக்கள் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. தற்போது முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த முகாம்களில் பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்