இந்தியாவில் ஒரே நாளில் 1,005 பேர் உயிரிழப்பு – 48,786 பேருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த முழு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 6 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது – முழு விபரம்!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,04,10,577 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி 1,005 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 3,99,459 ஐ எட்டியுள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 61,588 பேர் குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் 5,23,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேர நிலவரப்படி தற்போது வரை இந்தியாவில் 33,57,16,019 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்து வருகின்றனர்.