இந்தியாவில் 1000 – ஐ கடந்த கொரோனா பாதிப்புகள் – அடுத்த நடவடிக்கை என்ன? பிரதமர் அவசர ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது.. இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சீடு – தொடரும் கேள்வி.. அமைச்சரின் அதிரடி பதில்!
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 280, குஜராத்தில் 180 மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை 100 க்கும் மேல் பதிவாகியுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7026 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை நாளொன்று ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி இன்று துறைசார் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தடுப்பு பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download