இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த மாதம் வரை ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சற்று குறைவக காணப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தொடர்ந்து மூன்றாவது நாளாக நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிகை 2 லட்சத்திற்கும் குறைவாக காணப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,65,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எண்ணிக்கை 2,78,94,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பின் எண்ணிக்கை 3,25,972 ஆக உயர்ந்துள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?மத்திய கல்வி வாரியங்கள் பரிசீலனை!!
மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2,76,309 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தமாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,54,54,320 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மருத்துவனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 21,14,508 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்டில் இதுவரை 21,20,66,614 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.